ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதுகளில் மலையாள சினிமாவுக்கு கிடைத்துள்ள ஏழு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது சுரபி லட்சுமிக்கு கிடைத்திருக்கிறது.. மின்னாமின்னங்கி' என்கிற படத்தில் நடுத்தர வயது விதவைத்தாயாக நடித்தற்காகத்தான் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இவர் முன்னணி கதாநாயகியும் அல்ல.. கிடைத்த வேடங்களில், அது சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் கேரக்டர் என்றாலும் அதில் தனது வேலையை திறம்பட செய்துவிட்டு போவார்.. தமிழில் கூட 'வாயை மூடி பேசவும்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த சுரபி லட்சுமிக்கும் விருதுபெர்ற மோகன்லால் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில், “மோகன்லால் தேசிய விருது பெற்றதில் எந்த அதிசயமும் இல்லை.. இன்னும் பல விருதுகளுக்கு சொந்தமாக வேண்டியவர் அவர்.. ஆனால் சுரபி லட்சுமி தேசிய விருது பெற்றதுதான் உண்மையிலேயே எனக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர். .