'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் இசை, நடனம், காமெடி போன்ற மேடை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார். அப்போது அவர்களது திறமைக்கு மதிப்பெண் போடுவதற்கு 3 அல்லது 4 சீனியர் கலைஞர்கள் நீதிபதிகளாக இடம்பெற்று வருகிறார்கள். ஆனால் அதைப்பார்த்து, திறமைக்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஜட்ஜ் போதாதா? இத்தனை பேர் தேவையா? என்கிற கருத்துக்கள் நேயர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதுகுறித்து இளமை புதுமை அர்ச்சனாவிடம் கேட்டபோது, தற்போது நான் பங்குபெற்று வரும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ், குஷ்பு மற்றும் நான் என 3 பேர் ஜட்ஜ்களாக இருக்கிறோம். சிறுவர் - சிறுமிகள் நடிக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களின் திறமையை மதிப்பிட 3 பேர் தேவையா? என்று கேட்டால், கண்டிப்பாக தேவை என்றுதான் நான் சொல்வேன்.
ஏனென்றால், நாங்கள் மூன்று பேருமே வேற வேற பரிமாணங்களை சேர்ந்தவர்கள். பாக்யராஜ் சார் இயக்குனர், குஷ்பு மேடம் நடிகை, நான் தொகுப் பாளினி. இப்படி இருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கலைஞர்களின் திறமையை மதிப்பிடுவோம். அதாவது ஒருவர் டயலாக் டெலிவரியை ஆராய்ந்தால், இன்னொருவர் பாடிலாங்குவேஜை கவனிப்பார். மற்றொருவர் ஆடியன்ஸ் பார்வையில் இருந்து அதற்கு ஒரு மதிப்பெண் கொடுப்பார். இந்த மூன்று கோணங்களையும் ஒரேயொரு நீதிபதி கவனித்து ஜட்ஜ்மென்ட் கொடுக்க முடியாது. அதனால்தான், மேடை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் மூன்று சீனியர் கலைஞர்களை நீதிபதிகளாக நியமிக்கிறார்கள் என்கிறார் அர்ச்சனா.