ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டவுட் செந்தில். தற்போது மாமோவ் நீங்க எங்க இருக்கீங்க -என்ற நிகழ்ச்சியை இயக்கி நடித்து வரும் அவர், என்னை நேரில் பார்ப்பவர்கள், உங்களைப்பார்த்தாலே சிரிப்பு சிரிப்பாய் வருது என்று சொல்கிறார்கள் என்கிறார்.
அது ஏன் என்பது பற்றி டவுட் செந்தில் கூறுகையில், ஆதித்யா சேனலில் நான் நடித்து வரும் மாமோவ் நீங்க எங்க இருக்கீங்க நிகழ்ச்சி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அதில் கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் சின்னச்சின்ன ஊடல் கூடல் விசயங்களை சொல்லி வருகிறேன். காமெடியும் கருத்தும் கலந்த அந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் நடிப்பதைப்பார்த்து விட்டு, ஒவ்வொரு எபிசோடிலும் நீங்கள் நடிப்பதைப் பார்த்தால் சிரிப்பு சிரிப்பாய் வருது. அந்த அளவுக்கு அந்த கதையும், அதில் நடிக்கும் உங்களது நடிப்பும் உள்ளது. முக்கியமாக, உங்களது பாடிலாங்கு வேஜ் சிரிப்பை தூண்டுகிறது என்கிறார்கள். நேயர்களின் இந்த கருத்து எனக்கு சந்தோசத்தைக்கொடுக்கிறது. ஒரு காமெடியனுக்கு இதைவிட என்ன வேண்டும்.
சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் பிருந்தாவனம், காந்திராமன் உள்பட சில படங்களிலும் குணசித்ரம் கலந்த காமெடி வேடங்களில் நடிக்கிறேன். சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், சூரிக்கு பிறகு இவரும் ஒரு நல்ல காமெடியன் என்று சொல்லும் அளவுக்கு காமெடியனாக வளர வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும், கதைகளுக்கேற்ப குணசித்ர நடிகராக இடம்பிடிக்கவும் ஆசைப்படுகிறேன். அந்த வகையில் தற்போது அங்காடித் தெரு மகேசுடன் நடிக்கும் காந்திராமன் படத்தில் படம் முழுக்க வரும் காமெடி யனாக நடிக்கிறேன். கிராமத்து பாணியில் காமெடி பண்ணியிருக்கிறேன்.
மேலும், ராதாமோகனின் பிருந்தாவனத்தில் குணசித்ர வேடத்தை காமெடி கலந்து பண்ணியிருக்கிறேன். டவுட் செந்திலுக்கு காமெடி மட்டும்தான் தெரியுமென்று இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்கள். இந்த படத்தில் உப்புக்கருவாடு படத்தை விடவும் நல்ல வேடம் கொடுத்துள்ளார் ராதாமோகன். அதனால் பிருந்தாவனம் படம் வந்த பிறகு காமெடி, சீரியஸ், குணசித்ர கேரக்டர்களில் டவுட் செந்திலை பயன்படுத்தலாம் என்று கோலிவுட் டைரக்டர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும் என்கிறார் டவுட் செந்தில்.