தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி அது இது எது. சிவகார்த்திகேயன் மூலம் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை இப்போது மா.கா.பா.ஆனந்த் நடத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் போலவே மா.கா.பாவும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு நவரச திலகம், கடலை, அட்டி படங்களில் நடித்தார். எந்த படமும் வெற்றி பெறவில்லை. தற்போது பஞ்சுமிட்டாய், மாணிக் படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா எதிர்பார்த்த உயரத்தை தரவில்லை என்பதால் அவர் நடத்தி வரும் அது இது எது நிகழ்ச்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தற்போது இந்த நிகழ்ச்சி 330 எபிசோட்களுடன் 7வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. தற்போது சிங் இன் தி ரெய்ன், சிரிச்சா போச்சு, கக்கக்கப்போ என 3 ரவுண்டுகளுடன் நடந்து வருகிறது. மேலும் சில அம்சங்களை சேர்த்து நிகழ்ச்சியை பொலிவூட்ட இருக்கிறார்கள். "அது இது எது நிகழ்ச்சிதான் மனசுக்கு நிறைவைத் தருகிறது. கடற்கரையில் நடப்பது போன்ற புத்துணர்ச்சியை தருகிறது. வேடிக்கையும் சந்தோஷமுமாக இருக்கிறது" என்கிறார் மா.பா.கா.ஆனந்த்.