'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சின்னத்திரைகளில் நூற்றுக்கணக்கான சீரியல்களில் நடித்தவர் அசோக். டப்பிங் சீரியல்களின் ஆதிக்கத்தினால் தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லை. இந்தநிலையில், தமிழில் உருவாகி வரும் சீரியல்களுக்கு சமீபகாலமாக வேற்று மொழி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார்கள். இதனால் தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்கிறார் அவர்.
அதுகுறித்து தினமலர் இணையதளத்திற்கு நடிகர் அசோக் அளித்த பேட்டியில்,
தமிழ் சீரியல்களை நம்பி ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் நடிக்க போதுமான வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில், மொழியே தெரியாத புது ஆர்ட்டிஸ்டுகளை கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். ஆனால் அது டப்பிங் சீரியல் மாதிரி உள்ளது. டப்பிங் சீரியல்களை ஒழிக்கனும்னு போராடிக்கிட்டிருக்கோம். இப்ப என்னடான்னா தமிழ் சீரியலே டப்பிங் சீரியல் மாதிரி மாறிக்கிட்டிருக்கு. இங்கே இருக்கிறவங்களுக்கே வேலை இல்லை. தமிழ் சீரியல்களில் தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர் நடி கை களை கூட்டி வந்து நடிக்க வைக்கிறார்கள்.
சினிமா மாதிரி புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆடியன்ஸ் அதை விரும்பவில்லை. என்கிட்டயே ஒரு மிடில் கிளாஸ் லேடி சொன்னார்கள். தெரிஞ்ச முகம் இருந்தால்தான் சீரியல் பார்க்க நல்லாயிருக்கும். இப்ப புதுசு புதுசாக நடிகர்கள் நடிக்கிறதனால டப்பிங் சீரியல் பார்த்த மாதிரிதான் இருக்கு என்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், சேனல்களில் அந்த மாதிரி கேட்கிறாங்க என்கிறார்கள். எது உண்மைன்னு தெரியல.
மேலும், தமிழே தெரியாதவர்கள் தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் பேசி நடிக்கிறார்கள். எங்களை மாதிரி பழைய ஆர்ட்டிஸ்டுங்களை மட்டுமே நடிக்க வையிங்கன்னு நாங்க சொல்ல வரல. நல்லா தமிழ் தெரிஞ்ச தமிழ் நடிகர் நடிகைங்களை நடிக்க வைக்கலாமே. கன்னட மொழி சீரியல்களில் தமிழன் போய் நடிக்க முடியுமா? அவங்க மாநிலத்தில் உள்ளவர்கள்தான் நடிக்க முடியும். இது ஏன் இங்க இருக்கிறவங்களுக்கு புரிய மாட்டேங்குது என்று தனது மன ஆதங்கத்தை சொல்கிறார் நடிகர் அசோக்.