'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரையில் பல மெகா சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். ஹீரோ-வில்லன் என முழுமையாக தன்னை மாற்றி நடித்து வரும் அவர், தற்போது கல்யாண பரிசு சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். ரெண்டு பொண்டாட்டிக் காரராக அவர் நடித்து வரும் இந்த சீரியலுக்கு எந்தமாதிரியான கமெண்ட்ஸ் கிடைத்துள்ளது என்று அவரை கேட்டபோது, அவர் நமக்களித்த பதில் இங்கே இடம்பெறுகிறது.
கல்யாண பரிசு சீரியல் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு ரெண்டு பொண்டாட்டிக்காரனைப் பற்றிய கதை இது. நல்லா விறுவிறுப்பாக கதை செல்கிறது. அடுத்தடுத்து திருப்புமுனைகளும், அதிர்ச்சி தரும் சம்பவங்களும் மாறி மாறி நடப்பதால், ரசிகர்களிடம் இந்த சீரியலுக்கு பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த சீரியலுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ் என்ன?
இந்த சீரியலின் கதையானது நாட்டில் நடந்தது அல்ல. கற்பனையாக வடிவமைத்ததுதான். ஆனால் சம்பவங்கள் பரபரப்பாக இருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று நேயர்கள் ஆர்வமுடன் ஒவ்வொரு நாளும் பார்க்கிறார்கள். அதேசமயம், என்னை பொது இடங்களில் சந்திக்கும் சில ரசிகர்கள், ஒரு மனைவியுடன் இப்போது இருக்கிறீர்கள். அடுத்த மனைவியுடன் எப்போது செல்வீர்கள் என்று சீரியலின் கதையோட்டத்தை சற்று கிண்டல் செய்வது போலவும் கேட்கிறார்கள். ஒரு கதை என்றால் இரண்டு விதமான கமெண்ட்சும் இருக்கத்தான் செய்யும். அதனால்,ரசிகர்களின் விமர்சனங்கள் எதுவானாலும் அதை ஒரே மாதிரியான மனநிலையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
ரெண்டு பொண்டாட்டி கதை, ஒரு பெண் இன்னொரு குடும்பத்துக்குள் புகுந்து கெடுப்பது என தொடர்ந்து சீரியல்கள் வருவது பற்றி?
தொடர்ந்து ஒரேமாதிரியான கதைகளில் சீரியல்கள் ஒளிபரப்பானால் ரசிகர் களுக்கு போரடித்து விடும். அதன்காரணமாக அவர்கள் வெளிமாநில சீரியல் கள் பக்கம் திரும்ப வாய்ப்பிருக்கிறது. அதனால் பாசிட்டிவான கதைகளில் சீரியல்கள் பண்ண வேண்டும். தொடர்ந்து அறைத்த மாவையே அறைக்காமல் இன்னும் மாறுபட்ட கதைகளில் நிறைய சீரியல்கள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
சரித்திர தொடர்கள் பற்றி?
சரித்திர கதைகளில் எவ்வளவோ நல்ல கருத்துக்கள் சொல்ல முடியும். சரித்திர கதைகளில் வரும் கதைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே வாழ்வை நெறிபடுத்தக்கூடிய விசயங்கள் கொண்டதாகவே உள்ளன. நான்கூட சமீபத்தில் பைரவபுரம் என்ற ராஜா காலத்து கதையில் ஹீரோவாக நடித்தேன். சி.ஜே.பாஸ் கர் இயக்கியுள்ள இந்த தொடர் ஒரு மலேசிய சேனலில் ஒளிபரப்பாகிறது.
சினிமா பிரவேசம்?
சீரியல்களிலேயே பிசியாக நடித்து வந்ததால் சினிமாவைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை. அதற்கான முயற்சியிலும் இறங்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் சினிமாவிலும் என்ட்ரி கொடுப்பேன். சீரியல்களில் ஹீரோ-வில்லனாக நடித்துள்ள நான் சினிமாவில் எந்தமாதிரியான வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். குறிப்பாக, என்னைக்கவர்ந்த நடிகர்களான ரகுவரன், பிரகாஷ்ராஜ் நடித்தது போன்று நெகடீவ் வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதேசமயம் ஹீரோ வேடங்கள் வந்தாலும் தவிர்க்க மாட்டேன். கிடைக்கிற வாய்ப்பு எதுவாக இருந்தாலும் மறுக்காமல் நடிப்பேன் என் கிறார் ஈஸ்வர்.