தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் கலக்கியவர் ஆனந்தி. கனா காணும் காலங்கள், ஜோடி நம்பர் ஒண், கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதுதவிர தாரை தப்பட்டை, பறந்து செல்லவா படங்களிலும் நடித்தார். இப்போது திடீரென தனது திருமண புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். "என்ன மேடம் திடீர், ரகசியதிருமணமா?" என்று கேட்டால் மறுக்கிறார். அவர் கூறியதாவது:
திடீர் திருமணமும் இல்லை. ரகசிய திருமணமும் இல்லை. வீட்டில் எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். நானும் உங்க விருப்பம் மாப்பிள்ளை பாருங்க என்று கூறியிருந்தேன். பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்தவர் தான் அஜய். பிசினஸ்மேன், சென்னைதான் சொந்த ஊர். ஆனால் பூர்வீகம் ஆந்திரா. அவரோட உறவுக்காரங்க ஆந்திராவில் இருக்கிறார்கள். அதனால் ஆந்திராவில் எளிமையாக கல்யாணம் நடந்தது. இதைத்தான் ரகசிய திருமணம் என்கிறார்கள்.
சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. என்னோட பிரண்ட்ஸ், சக கலைஞர்கள் கலந்துக்கிட்டாங்க. அடுத்த வாரம் கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதில் என்னோட உறவுக்காரர்கள் கலந்துக்குவாங்க. நிச்சயதார்த்தம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகுதான் கல்யாணம் நடந்தது. இந்த ஒரு மாதம் காதலித்துக் கொண்டோம். திருமணத்துக்கு பிறகு சின்னத்திரை, பெரிய திரையில் தொடர்ந்து எனது பயணம் இருக்கும். அதற்கு அவர் முழு அனுமதி கொடுத்திருக்கிறார். என்கிறார் ஆனந்தி.