டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஞானராஜசேகரன் இயக்கிய மோகமுள் படத்தில் 8 வயது சிறுவனாக நடித்தவர் துரைமணி. அதையடுத்து பல சீரியல்களில் வில்லனாக நடித்து வந்த அவர் தற் போது வானவில் டிவியில் செலிபிரிட்டி ஷோவில் தொகுப்பாளராகியிருக்கிறார்.
இதுபற்றி துரை மணி கூறும்போது:மோகமுள் படத்தில் நடித்த பிறகு நான் படித்து வந்த பள்ளியில் என்னை அனைவருமே நடிகர் என்றுதான் அழைப்பார்கள். அதன்காரணமாக நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஆனால் பின் னர் சினிமாவில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் மூன்று முறை முயற்சி எடுத்தும் செஸ்ட் இல்லை என்று அனுப்பி விட்டனர். அதனால் பின்னர் சீரியல்களில் நடித்தேன். சிவரகசியம், ஆதிரா, தெய்வமகள் என நடித்தேன். பல சீரியல்களில் வில்லனாக நடித் துள்ளேன்.
இப்போது வானவில் டிவியில் 6 மாதமாக செலிபிரிட்டி ஷோவில் ஆங்கராக உள்ளேன். நடிகனாக மட்டுமே இருந்த எனக்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதும் ஒரு புதிய அனுபவத்தைக்கொடுத்து வருகிறது. அதேசமயம் தொடர்ந்து சினிமா, சின்னத்திரைகளில் நடிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
அதனால் விரைவில் என்னை இதுவரை பார்த்ததை விட அதிரடியான வில்லன் வேடங்களில் பார்க்கலாம் என்று கூறும் நடிகர் துரைமணி, விஸ்காம் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பு எடுத்து வருகிறேன். இப்படி யாருக்கேனும் என்னால் முடிந்த உதவிகள் செய்வது மனதளவில் திருப்தியை கொடுக்கிறது என்கிறார்.