'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் நாட்டில் விஜய் பிலிம் அவார்ட்ஸ் போன்று கேரளாவில் புகழ்பெற்ற திரைப்பட விருது விழா ஏசியா நெட் விருது. சமீபத்தில் இந்த விழா பிரமாண்டமாக நடந்தது. மலையாள திரையுலகமே கலந்து கொண்டது. இந்த நிகழ்ச்சி வருகிற 11 மற்றும் 12ந் தேதிகளில் ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த விருது விழாவின் ஹைலைட்டாக மோகன்லாலின் புலிமுருகன் இருக்கிறது. இதற்காக மோகன்லால் மேடையில் புலிமுருகனாக தோன்றி சண்டை காட்சியில் நடித்திருக்கிறார். மேடையில் தத்ரூபமாக சண்டை கலைஞர்களுடன் மோகன்லால் சண்டையிட்டதுதான் இப்போது மலையாள தேசத்தின் ஹாட் டாபிக்.
இதுதவிர நடிகைகள் வேதிகா, இஷா தல்வார், நடிகர் நிவின்பாலி ஆகியோர் நடனமாடுகிறார்கள். ரிமி டாமி, ஸ்டீபன் தேவசயா, உன்னி மேனன், சித்தாரா, சித்தார்த் மேனன், கவிதா அஜித் நந்திதா காந்தி உள்பட மலையாள நடிகா, நடிகைகள் பாடகர் பாடகிகள் கலந்து கொண்ட பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. நடிகை தமன்னாவுக்கு சிறப்பு விருது அழைப்பாளராக கலந்து கொண்டிருக்கிறார்.