ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயா டிவியில் ஒளிபரப்பான காலபைரவர் சீரியலில் அறிமுகமானவர் நடிகை நேத்ராஸ்ரீ. தொடர்ந்து தென்றல், பொன்னூஞ்சல், சபீதா என்கிற சபாபதி போன்ற சீரியல்களில் நடித்தவர், தற்போது வாணி ராணி, தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். இதுதவிர நேத்ரா, புயலாய் கிளம்பி வர்றோம் உள்பட சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக நேத்ராஸ்ரீ அளித்த பேட்டி...
மீடியாவில் உங்களது என்ட்ரி குறித்து சொல்லுங்கள்?
2011-ல் சென்னை கிண்டியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போது தினமும் எண்ணூரில் இருந்து கிண்டிக்கு ரயிலில் செல்வேன். அப்போது எனது 6 வருட ரயில் நண்பரான மீஞ்சூரைச் சேர்ந்த டைரக்டர் ராஜீவ் பிரியன் மோகன்ராஜ் தான் இயக்கும் சீரியலில் என்னை நடிக்க அழைத்தார். எனக்கு நடிக்கத் தெரியாது என்று மறுத்தேன். ஆனால் அவர் உன்னிடம் நடிப்புத்திறமை உள்ளது. உன்னால் முடியும் என்று சொல்லி ஜெயா டிவிக்காக தான் இயக்கிய காலபைரவர் சீரியலில் நடிக்க வைத்தார். அந்த சீரியலில் சங்கவி நாயகியாக நடித்தார். அதில் எனது நடிப்பு பேசப்பட்டதால், அடுத்தடுத்து பல சீரியல்கள் கிடைத்தன. இப்போது சீரியல்களில் பிசியாக இருக்கிறேன்.
எந்த மாதிரியான கேரக்டர்களில் நடித்திருக்கிறீர்கள்?
காலபைரவர் சீரியலில் வில்லியாக நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. அதில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு தென்றல், பொன்னூஞ்சல், சபீதா என்கிற சபாபதி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தன. பாசிட்டீவ், நெகடீவ் ரோல்களில் கலந்து நடித்தேன். தற்போது வாணி ராணியில் சப்-இன்ஸ்பெக்டராகவும், தாமரையில் இன்ஸ்பெக்டராகவும் நடித்து வருகிறேன். இதில் வாணி-ராணியில் பிரபல நடிகையான ராதிகா மேடத்துடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது. அதை பெருமையாக கருதுகிறேன். மற்றபடி, எந்தமாதிரி வேடமாக இருந்தாலும் எனது திறமைக்கு தீனி போடும் வேடங்களாக இருக்க வேண் டும் என்று எதிர்பார்க்கிறேன்.
சினிமாவில் நடிப்பது பற்றி?
சினிமாவில் காஞ்சனா-2வில் லாரன்ஸ் அம்மாவாக எனது போட்டோ இடம் பெற்றது. அதன்பிறகு டைரக்டர் ஏ.வெங்கடேசின் நேத்ரா படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீவித்யா நடித்தது போன்ற கெட்டப்பில் நடித்து வருகிறேன். புயலாக கிளம்பி வர்றோம் படத்தில் வில்லனின் மனைவியாக நடிக்கிறேன். நேத்ரா படத்தில் நான் நடித்துள்ள காட்சிகளைப் பார்த்து விட்டு டைரக்டர் வெங்கடேஷ் நான் நன்றாக நடித்திருப்பதாக சொன்னார். அடுத்த படத்தில் இன்னும் நல்ல ரோல் தருகிறேன் என சொன்னார். ஒரு முன்னணி இயக்குனரே அப்படி சொன்னது பெரிய உற்சாகத்தைக்கொடுத்தது. இதுதவிர அட்லி இயக்கத்தில் விஜய் சார் நடிக்கும் புதிய படம் உள்பட 4 படங்களில் கமிட்டாகியிருக்கிறேன்.
ரோல்மாடல் நடிகைகள்?
சுஜாதா, விஜயசாந்தி, ராதிகா ஆகியோர் எனது ரோல் மாடல். அவர்களை மாதிரியெல்லாம் என்னால் நடிக்க முடியாது. என்றாலும் அவர்களை பின்பற்றுகிறேன். குறிப்பாக அவர்கள் நடித்தது மாதிரியான அதிரடி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது.
மேலும், என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்கிற கட்டுப்பாடு எதுவும் இல்லை. பாட்டி வேடம் கொடுத்தால்கூட தயங்காமல் நடிப்பேன். சின்னத்திரை-சினிமா இரண்டிலுமே பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். எனது உடல் பொருள் ஆவி எல்லாமே நடிப்புக்குத்தான். அந்தவகையில், வாழ்நாள் முழுக்க நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும். நடிகையாகவே இறந்துவிட வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால ஆசையாக உள்ளது என்கிறார் நடிகை நேத்ராஸ்ரீ.