இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளி சுவாதிஷ்டா கிருஷ்ணன். பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை லிங்குசாமியை பேட்டி எடுக்கச் சென்றபோது "சினிமாவில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அப்போது மறுத்து விட்டு வந்துவிட்டார். ஒருமுறை மிஷ்கினை பேட்டி எடுத்தபோது "நான் சவரக்கத்தி என்ற படத்தை தயாரிக்கிறேன். அதில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அது இரண்டு குழந்தைக்கு தாய் கேரக்டர் என்பதால் மறுத்துவிட்டார். பின்னர் இன்னொரு கேரக்டர் இருக்கிறது என்று சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டார். இப்படியாக சுவாதிஷ்டாவை சினிமா நடிகை ஆக்கிவிட்டார்கள்.
முதல் படம் வெளிவருதற்கு முன்பே தற்போது மதம், கீ, அசோக் செல்வன் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். "சின்ன வயசுல விளம்பர படங்கள்ல நடிச்சிக்கேன். மிஷ்கின் சார் கேட்டதும் மறுக்க முடியவில்லை நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா நடிக்கிறதுல குடும்பத்துக்கு அவ்வளவா பிடிக்கல குறிப்பா அப்பாவுக்கு. என்றாலும் நன்றாக நடித்து அவுங்க மனசை மாத்திடலாமுன்னு நம்பிக்கை இருக்கு. நல்ல கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிப்பேன். கிளாமராக நடிக்க மாட்டேன்" என்கிறார் சுவாதிஷ்டா.