டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குஷ்பு லீடு ரோலில் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலில்தான் முதன்முதலாக நான் நடித்தேன். பின்னர், கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற தொடரில் ஒரு நிருபர் வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு பொம்மலாட்டம் தொடரில் நடித்தேன். நான் நடித்த வேடங்கள் சிறியது என்றாலும், பேசப்பட்ட வேடங்கள் என்கிறார் நடிகர் சுதாகர்.
அவர் மேலும் கூறும்போது, பல சீரியல்களில் நடித்தபோதும், கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்து மறக்க முடியாது. அவரது அமுதா ஒரு ஆச்சர்யக்குறி தொடரில் நிருபராக நடித்த நான், ஒரு டைரக்டருக்கும், ஹீரோயினிக்கும் இருக்கும் காதலை பத்திரிகையில் எழுதி விடுவேன். அதனால் அந்த டைரக்டருக்கும், எனக்குமிடையே பிரச்சினை வரும். அதோடு, நேத்து வர சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சவன் இன்னைக்கு டைரக்டராகிட்டே என வசனம் பேசுவேன். அதனால் அந்த நேரத்தில் பல டைரக்டர்கள் என்னை தவிர்த்தனர். ஆனபோதும் நான் கவலைப்படவில்லை. கே.பாலசந்தர் சீரியலில் நடித்ததை பெருமையாக எடுத்துக்கொண்டேன். அதோடு சீரியல்களில் இன்னும் அதிரடியான வில்லன் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
மேலும், தற்போது காதல் வழக்கு, மதுரை நரிக்குறவர் போன்ற படங்களிலும் நடிக்கிறேன். பெரிய திரையில் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டபோதும் சீரியலை நான் தவிர்க்கவில்லை. சினிமா-சின்னத்திரை இரண்டிலும் வெயிட்டான வேடங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் சுதாகர்.