இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலுமே குழந்தைகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த நிகழ்ச்சியும் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் விதமாகவோ, குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களை விதைக்கும் விதமாகவோ இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.
ஒரு சேனலில் குழந்தைகளை உட்கார வைத்து கேள்வி கேட்கிறார் தொகுப்பாளர். எதிரே பெற்றோர்கள் அமர்ந்திருக்கிறார்கள். "உங்க அப்பாவுக்கு அம்மா மேல கோபம் வந்தா எதைக் கொண்டு அடிப்பாரு?" என்று கேட்கிறார் தொகுப்பாளர். "செருப்பாலேயே அடிப்பாரு" என்கிறது குழந்தை, அதை கேட்டு பெற்றவர்கள் சிரிக்கிறார்கள். "உங்க அம்மாவுக்கு பொருத்தமான ஜோடி அஜீத்தா, விஜய்யா?" என்று கேட்கிறார் தொகுப்பாளர் "அஜீத் ஓகே" என்கிறது குழந்தை. இப்படித்தான் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. சில குழந்தைகள் அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறார்கள். அல்லது அப்படி பேச பயிற்சி கொடுக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள்.
இன்னொரு சேனலில் குழந்தைகள் நடிப்பு போட்டியாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரும்பாலும் திரைப்பட காட்சிகளையே அவர்கள் நடித்துக் காட்டுகிறார்கள். பருத்தி வீரன் கார்த்தியையும், முத்தழகையும் மேடையில் கொண்டு வருகிறார்கள். சில சிறுவர்கள் கணவன், மனைவியாக நடித்து மேடையிலேயே சண்டை போடுகிறார்கள். இப்படி தங்களின் வயதுக்கு மீறிய உணர்வுகளை நடிப்பு என்ற போர்வையில் வெளிப்படுத்துகிறார்கள். அதை கைதட்டி ரசிக்கிறார்கள் பெற்றோர்கள்.
குழந்தைகள் நடன நிகழ்ச்சிகள் அனைத்துமே திரைப்பட பாடல்களுக்குதான். பெரியவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களாக இல்லாமல் அதீத உணர்வுகளுடன் ஆடுகிறார்கள். கொஞ்சம் பரவாயில்லை என்றால் அது பாடல் நிகழ்ச்சிதான். ஒரு போட்டியில் வெற்றி தோல்வி சகஜம்தான். இருந்தாலும் தோற்பவர்களின் கண்ணீரையும், வேதனையையும் பதிவு செய்து ஒளிபரப்பி அந்த குழந்தையின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்துகிறார்கள்.
டில்லியில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி கண்காணிப்பு வாரியத்துக்கு இது தொடர்பான நிறைய புகார்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை வாரிய உறுப்பினர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.