தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராதாமோகன் டைரக்ட் பண்ணிய 'கௌரவம்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் அல்லு சிரிஷ்.. இவர் தெலுங்கு இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி. தமிழில் 'கெளரவம்' படம் அவருக்கு வரவேற்பு தராத நிலையில், தெலுங்கிலேயே கிடைத்த படங்களில் நடித்துவந்த அல்லு அர்ஜுனின் கவனம், மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியது.. தனது அண்ணன் அல்லு அர்ஜுன் படங்களுக்கு மலையாளத்தில் இருக்கும் மவுசை உபயோகப்படுத்திக்கொண்டு தானும் மலையாள சினிமாவுக்குள் நுழையலாமா என கடந்த ஒரு வருடமாகவே தக்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாராம் அல்லு சிரிஷ்..
ஆனால் அவருக்கு ரொம்பவே சிரமம் வைக்காமல், மலையாள வாய்ப்பு அவரையே தேடிவந்து கதவை தட்டியிருக்கிறது.. அதுவும் ஜாக்பாட் வாய்ப்பு.. மோகன்லால்-மேஜர் ராவி காம்பினேஷனில் ராணுவ பின்னணியில் உருவாகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு.. முன்பு தமிழ் நடிகர் ஜீவாவுக்கு 'கீர்த்தி சக்ரா (அரண்) மூலமாக இதுபோல கிடைத்த வாய்ப்பு அவரது கேரியரை ஒருபடி உயர்த்தியது.. அதேபோல அல்லு சிரிஷுக்கும் அவரது சினிமா பயணத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய படமாக இது இருக்கும்.. இந்திய-சீன எல்லைப்போரை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்தப்படத்தில் டேங்க் கமாண்டர் வேடத்தில் நடிக்க இருக்கிறார் அல்லு சிரிஷ்.