பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக, இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண் கேரக்டரில் நடித்த ராகினி நந்த்வனியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? 'டேராடூன் டைரி' என்கிற இந்திப்படம் மூலமாக அறிமுகமான இவர்தான், இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படத்திலும் நடித்தவர்... அதைத்தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் அமையாமல் இருந்தவருக்கு 'அப்பாவும் வீஞ்சும்' என்கிற படத்தில் வாய்ப்பு வந்து கடைசியில் ஏனோ தட்டிப்போனது..
இப்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கும் சான்ஸ் தேடி வந்திருக்கிறது. படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டும் இருக்கிறார் ராகினி. படத்தின் பெயர் 'ஹதியா'.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், 'பெருச்சாளி' மலையாளப்படம் தான் என்றாலும் அதன் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் தான் நடந்தது.. அதனால் கேரளாவின் அழகை தரிசிக்க முடியாமல் வருத்தத்தில் இருந்தவருக்கு இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே கேரளாவில் நடைபெறுவதால் அந்த மனக்குறை நீங்கியுள்ளது.. கேரளா இவ்வளவு அழகா என வியந்து போயிருக்கிறார் ராகினி.