பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர் செந்தில். ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை நடிகர் ஆனவர். சரவணன் மீனாட்சியில் உடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனாக சினிமாவில் அறிமுகமானவர். செங்காத்து பூமியிலே, பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவண்டா நீ உள்பட சில படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு உதவவில்லை.
இதனால் சினிமா வாய்ப்பு இன்றி இருந்தவர் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். அதுவும் தனது மனைவி ஸ்ரீஜாவுடன். சரவணன் மீனாட்சி ஜோடி மாப்பிள்ளை என்ற தொடரில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறது. இந்த தொடர் விஜய் டி.வியில் வருகிற நவம்பர் 7ந் தேதி முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. செந்திலும், ஸ்ரீஜாவும் இணைந்து நடித்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்குள் வருகிற ஈகோதான் கதை களம்.