பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதுக்கவிதை, தாயுமானவன் தொடர்களின் நாயகி மகேஸ்வரி. அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களையும், பெண்களையும் டி.வி.முன் கட்டிப்போட்டவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகியிருக்கும் நிலையில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், சீரியலில் அல்ல சினிமாவில்.
மகேஸ்வரிக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவரை பிரிந்து வாழ்க்கிறார். இந்த நிலையில் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்து தண்ணீர் தண்ணீர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் சீரியலில் நடிப்பது சினிமா வாய்ப்புக்கு பாதகமாக இருக்கும் என்பதால் சீரியலில் நடிப்பதை தவிர்த்து விட்டார். ஆனால் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் தொடர முடிவு செய்திருக்கிறார்.