அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தேவதை, கைராசி குடும்பம் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் சுபத்ரா. கைராசி குடும்பத்தில் அண்ணி கேரக்டரில் அசத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் தனது அடுத்த அவதாரத்தை எடுக்க இருக்கிறார். அது எழுத்தாளர் அவதாரம் மற்றும் இயக்குனர் அவதாரம்.
"எனக்கு விருப்பமானது நடிப்பா, எழுத்தா என்ற கேட்டால் எழுத்து என்று தான் சொல்வேன். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்தது. நிறைய கதை, கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகையாகிவிட்டேன். கடைசிவரை நடிகையாகவே இருக்க விருப்பம் இல்லை. இதனால் விரைவில் அடுத்த துறைக்கு செல்ல இருக்கிறேன். சீரியலுக்கென்று சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றை முழுமைப்படுத்தும் பணியில் தீவிரமாக இருக்கிறேன். என் கதையை நானே இயக்குவேன். எந்த சேனல், என்ன கதை என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்கிறார் சுபத்ரா. அழகான பொண்ணு சீரியல் இயக்கினா சீரியலும் அழகாத்தான் இருக்கும்.