தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாசமலர் தொடரில் நடித்து வருகிறவர் சந்திரா லக்ஷ்மண். இந்த தொடர் மூலம் பெண்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர். ஆயிரம் எபிசோட்களிலும் வந்த ஒரே நடிகை என்ற பெயரும் சந்திராவுக்கு உண்டு.
சந்திராவுக்கு தனது தாய்மொழியான மலையாள சீரியல்களில் நடிக்கும் ஆர்வம் எப்போதும் உண்டு. 7 வருடங்களுக்கு முன்பு மழையறியாதே என்ற மலையாள தொடரில் நடித்தார். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார். பாசமலருக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் மலையாள தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் அதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது. "மலையாள தொடர்களின் கதைகள் ஆழமாக இருக்கும். நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும். அதனால்தான் மலையாள சீரியல்கள் மிகவும் பிடிக்கும்". என்கிறார் சந்திரா லக்ஷ்மண்.