ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டப்பிங் சீரியல்கள் இறக்குமதியால் தமிழ் கலைஞர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு டப்பிங் சீரியல்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி விஜய் டி.வி. அடுத்த அதிரடியை ஆரம்பிக்கிறது. தனித்தனி நேரங்களில் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியர்களை காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை தொடர்ச்சியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கு காவிய நேரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
காலை 8 மணிக்கு மகாதேவ், 9 மணிக்கு சீதையின் ராமன், 9.30 மணிக்கு மங்கையின் சபதம், 10 மணிக்கு கிரன்மாலா, 10.30க்கு என்னுடைய தோட்டத்தில், 11 மணிக்கு அம்மா, 11.30க்கு என்றும் அன்புடன் என தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிறது. வருகிற அக்டோபர் 3ந் தேதி முதல் தொடங்கும் இந்த காவிய நேரம் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும்.