'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதிய தலைமுறை சேனலில் 4 ஆண்டுகளாக நட்சத்திர செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சரண்யா. ‛சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது , ‛ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' போன்ற படங்களிலும் நடித்தார். திடீரென லண்டன் சென்றார். அங்கு சில மாதங்கள் இருந்துவிட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது நியூஸ் 18 சேனலில் செய்தியாளராக பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
தற்போது செய்தியாளராக பணியாற்றினாலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே சரண்யாவின் விருப்பமாம், இதனால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது சர்வதேச படவிழாக்களில் நிறைய விருது வாங்கியது. எனக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நட்புக்காக அந்தப் படத்தில் நடித்தேன். மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தது. தற்போது தோழிகள் உனக்கு நடிப்பு நன்றாக வருகிறது என்று வற்புறுத்துவதால் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனது செய்தியாளர் பணிக்கு பங்கம் வராமல் நல்ல கேரக்டர்கள் வரும்போது நடிப்பேன். மரத்தை சுற்றி டூயட் பாடுகிற சாதாரண ஹீரோயின்கள் கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. நல்ல அழுத்தமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் சரண்யா.