ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் டான்ஸ். இதில் 30 குழுவைச் சேர்ந்த ஆயிரம் பேர் ஆடினார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. தனியாகவோ குழுவாகவோ பங்கேற்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம். இதுவரை விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு 10 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த அணியினைரைக் கொண்ட இறுதி சுற்று போட்டிகள் நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. நடிகைகள் ப்ரியாமணி, ராதா, நடன இயக்குனர் கல்யாண் நடுவர்களாக இருந்தனர். பரபரப்பாக நடந்த இறுதி சுற்றில் முதல் இடத்தை ட்ரீம் டீம், மற்றும் ஊட்டி ஏடிஎஸ் அணிகள் பகிர்ந்து கொண்டன. இரண்டாவது இடம் திருச்சி என்&பீட்டர்ஸ் அணிக்கு கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா பரிசு வழங்கினார். பிரியங்கா தேஷ் பாண்டே, மா.பா.கா. ஆனந்த் தொகுத்து வழங்கினர்.