தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என்கிற படத்தை இயக்கியவர் சாஜித் யாஹியா. ஜெயசூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் யாஹியா.. பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் கதையின் நாயகனாகவும், மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்கள். இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் மோகன்லாலின் தீவிர ரசிகையாக நடிக்க இருக்கிறாராம்.
அதற்கு காரணமும் இருக்கிறதாம். கதைப்படி மஞ்சு வாரியர் மருத்துவமனையில் பிறந்த சமயத்தில் தான் மோகன்லால் 'அறிமுகமான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படம் வெளியாகுமாம். அதன்பின் அவர் ஆறாவது படிக்கும்போது மோகன்லாலின் படம் ஒன்றை பார்த்து விட்டு தனது வீட்டில் உள்ள பிரச்சனை ஒன்றை சரி செய்வாராம். அதன்பின் மோகன்லால் படங்கள் அவரது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகிவிடுமாம். அவருடைய வாழ்க்கையில் தனது படங்களின் மூலம் மோகன்லால் ஒரு ஆலோசகராகவே மஞ்சு வாரியருக்கு இருப்பாராம்.. இப்படி போகிறதாம் கதை..