அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள நடிகர் தான் என்றாலும் தமிழ்சினிமா தனக்கு அளித்த கௌரவத்தை மனதில் கொண்டு தனது மகன் காளிதாஸை தமிழில் அறிமுகப்படுத்தும் ஆசையில் இருந்த ஜெயராம் பாலாஜி தரணீதரனின் டைரக்சனில் 'ஒரு பக்க கதை'யில் மகனை நடிக்க வைத்தார். சில காரணங்களால் அந்தப்படம் வெளியாகாமல் இருக்க, அடுத்ததாக பிரபுவுடன் சேர்த்து 'மீன் குழம்பும் மண்பானையும்' என்கிற படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படமும் ஆடியோ ரிலீஸ் முடிந்த நிலையில் ரிலீஸாக தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், சரி.. மலையாளத்திலாவது தனது மகனின் அறிமுக வேலைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள ஜெயராம், மலையாளத்தில் காளிதாஸ் நடிக்கும் முதல்படமே குறிதப்பாமல் வெற்றிக்கனியை பறிக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது இயக்குனர் அப்ரிட் ஷைனைத்தான்.. யார் இந்த அப்ரிட் ஷைன் என்கிறீர்களா..? நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டுமுறை 100 நாள் படங்களை கொடுத்தவர்.. தனது ஹாட்ரிக் சாதனைக்காக துடிப்புடன் தயாராகி வரும் அப்ரிட் ஷைன் படத்தில் காளிதாஸ் அறிமுகமாவது வெற்றிக்கான நூறு சதவீத உத்தரவாதம் என நம்புகிறாராம் ஜெயராம்.