ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
வழக்கமாக கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள். அதனாலேயே கடந்தமுறை கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மலையாள உரிமையை மலையாள நடிகர் விஜய்பாபு தனது ப்ரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனம் மூலம் 5.6 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றினார். அதில் ஓரளவு லாபமும் பார்த்தார்.
இந்தமுறையும் விஜய்-60' படத்தை கைப்பற்றலாமா என விஜய்பாபு யோசனையல் இருக்க ஐ.எப்.ஏ.ஆர் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம் இந்தப்படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளதோடு, அதை தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டது. இந்தமுறை விஜய் படத்தின் வியாபாரம் 6.25 கோடி ரூபாய்க்கு முடிந்ததாக சொல்லப்படுகிறது. பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடையும் என்றும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.