‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி மணிமேகலை. பாட்டு கேட்பதற்காக போன் பண்ணுகிறார்களோ இல்லையோ இவருடன் பேசுவதற்காக போன் பண்ணி பாட்டு கேட்கிற இளவட்டங்கள் அதிகம். இவர் பெயரில் பேன் கிளப்பே இருக்கிறது. தற்போது மணிமேகலைக்கு வேர்ல்ட் இண்டக்ரேஷன் கவுன்சில் என்ற அமைப்பு சிறந்த தொகுப்பாளினி விருதை வழங்கி இருக்கிறது. இந்த அமைப்பு நடத்திய விழாவில் கவர்னர் ரோசய்யா இந்த விருதை மணிமேகலைக்கு வழங்கினார்.
இதுகுறித்து மணிமேகலை கூறியிருப்பதாவது: பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழையும்போதே மீடியாவிற்குள்ளும் வந்து விட்டேன். முதல் பணியே தொகுப்பாளினி தான். இந்த வேலை எனக்கு பிடித்து விட்டதால் வேறு பணி பற்றி யோசிக்காமல் இதில் தொடர்கிறேன். படித்துக் கொண்டே தொகுப்பாளியாக இருக்க வீட்டிலும் சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். அந்த சுதந்திரம்தான் என்னை சிறந்த தொகுப்பாளினி விருது வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது. தொடர்ந்து மகிழ்ச்சியோடு எனது பணியை தொடர்கிறேன் என்கிறார் மணிமேகலை.