தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரேநாளில் நடக்கும் சம்பவங்கள் என்கிற கான்செப்ட்டை மையமாக கொண்டு வருடத்திற்கு குறைந்தது பத்து படங்களாவது மலையாளத்தில் வெளியாகி விடுகின்றன. அறிமுக இயக்குனர்களும், இரண்டாம் நிலை இயக்குனர்களும் மட்டுமே கவனம் செலுத்திவந்த இந்த கான்செப்ட்டில் முன்னணி நடிகர்கள் அவ்வளவாக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் மம்முட்டியை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கவுள்ள புதிய படம் கேரள நகரம் ஒன்றில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தானாம்.
இந்தப்படத்தில் மம்முட்டி சராசரி நகரத்து மனிதனாக நடிக்கிறாராம். அப்படி ஒரே நாளில் நிகழும் பிரச்சனைகள் மம்முட்டியை எப்படி திசைமாற்ற முயற்சிக்கின்றன என்பதும் அதிலிருந்து மம்முட்டி எப்படி மீள்கிறார் என்பதும் தான் கதையாம். இந்தப்படத்தின் கதையை கேட்டதுமே ஜீத்துவிடம் உடனே படப்பிடிப்பிற்கு நாள் குறிக்க சொல்லிவிட்டாராம் மம்முட்டி.. ஏற்கனவே 'மெமொரீஸ்' படத்தை பிருத்விராஜுக்கும், 'த்ரிஷ்யம்' படத்தை மோகன்லாலுக்கும் விட்டுக்கொடுத்து இரண்டு ஹிட்டுகளை கைநழுவ விட்ட மம்முட்டி, இந்த முறை சுதாரித்துக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.