டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சேனல்களில் டப்பிங் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நேரடி தமிழ் சீரியல்களை ஒளிபரப்பி வந்த முன்னணி சேனல்களும் டப்பிங் சிரியலை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டது. இதனால் பல நெடுந்தொடர்கள் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. தமிழ் சீரியல்களை சீக்கிரம் முடித்துவிடும்படி சீரியல் தயாரிப்பாளர்களை முன்னணி சேனல்கள் வற்புறுத்த தொடங்கி உள்ளது.
இதனால் தமிழ் சீரியல்களை நடிக்கும் நடிகர் நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை இழந்து வருகிறார்கள். டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை கண்டித்தும், தமிழ் சீரியல்களுக்கு மக்களிடம் ஆதரவு வேண்டியும், சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்புள்ள அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக வருகிற 14ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு பிரமாண்ட உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. போராட்டத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். பல திரைப்பட சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் என்று தெரிகிறது.