பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்ட்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வாஸ்கோடகாமா என தற்சமயம் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நாளை(ஜூலை 29) முதல் துவங்குகின்றன. ஆகஸ்ட் 1 முதல் மகேஷ் பாபு படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பை பாடலுடன் துவங்க முருகதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றதாம். மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார்.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐதராபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன. மேலும் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளதால் இரு மொழிகளுக்கும் பொதுவான தலைப்பையே படத்திற்கு வைக்க இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் முடிவு செய்துள்ளார். மகேஷ் பாபுவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 8ல் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.