இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 'ஸ்ரீவெங்கடேஷ்வரா' என்ற பக்தி சேனல் நடத்தப்பட்டு வருகிறது. இது திருப்பதி திருமலையிலிருந்து ஒளிபரப்பாகிறது. இந்த சேனல் தெலுங்கு மொழியில் மட்டும் ஒளிபரப்பாகும். தினமும் ஒரு மணிநேரம் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும். தமிழில் முழுநேர பக்தி சேனல் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது.
24 மணி நேர தமிழ் பக்தி சேனலுக்கான சேட்டிலைட் வசதி, தொழில்நுட்ப வசதி அனைத்தையும் செய்து முடித்து விட்டது தேவஸ்தானம். அரசின் அனுமதி கிடைத்துவிட்டால் ஒளிபரப்பை துவக்கி விடும். தற்போது ஆந்திராவை சேர்ந்தவரும் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தருமான வெங்கய்யா நாயுடு தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகிவிட்டதால் எளிதில் அனுமதி கிடைக்கும் என்ற தெரிகிறது. சமீபத்தில் டில்லி சென்ற திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் டில்லியில் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து கோரிக்கை வைத்து வந்துள்ளார். எனவே விரைவில் தமிழில் 24 மணி நேர பக்தி சேனல் தொடங்கப்படும் என்று தெரிகிறது.