‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல மலையாள நடிகரும் முன்னாள் தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவருமான முகேஷை காணவில்லை என கேரளாவில் கொல்லம் தொகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் நடித்துவரும் முகேஷுக்கு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்கிற அவரது நீண்டநாள் ஆசை சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் நிறைவேறியது.. கொல்லம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் முகேஷ்.
ஆனால் கொல்லம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் நேற்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு சென்று, எங்களது எம்.எல்.ஏ முகேஷை அவர் வெற்றிபெற்ற பின்னர் எங்கள் தொகுதிப்பக்கமே பார்க்கமுடியவில்லை.. கடைசியாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது பார்த்ததுதான். அவரை கண்டுபிடித்து தாருங்கள் என மேன் மிஸ்ஸிங் புகார் கொடுத்துள்ளார்களாம். தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.. அதற்குள்ளாகவே எதிராளிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் முகேஷ்.