'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற்றதை அடுத்து சின்னத்திரையில் இருந்து பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஹீரோக்களாகி வருகின்றனர். அதேபோல், சில தொகுப்பாளினிகளும் சினிமாவில் என்ட்ரியாகி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது வைசாலி என்ற தொகுப்பாளினியும் இணைந்துள்ளார். இவர் சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர். அதோடு 50க்கும் மேற்பட்ட சினிமா ஆடியோ விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள வைசாலி, தற்போது ராஜாமந்திரி படத்தில் நடிகையாகியிருக்கிறார்.
இந்த படத்தில் கலையரசன்-ஷாலின் முதல் ஜோடியாக நடிக்க, இன்னொரு ஜோடியாக காளி வெங்கட்- வைசாலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தனது எதிர்வீட்டில் வசிக்கும் வைசாலிக்கு காளி வெங்கட் காதல் தூது விடுவது. பின்னர் அவரை எதிர்த்த வீட்டு காளி பிளவரே என்று பாடி கலாய்ப்பது என அவர்கள் ட்ரேக் ஜாலியாக இடம்பெற்றிருக்கிறதாம்.
இதுபற்றி வைசாலி கூறுகையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்ததில்லை. ஆனால் நான் தொகுத்து வழங்குவதைப்பார்த்து சிலர் நடிக்க அழைத்து வந்தனர். அப்படித்தான் ராஜாமந்திரி படத்தில் நடித்தேன். இந்த படத்தில் கிராமத்து கதை என்பதால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த வாழ்க்கை முறை புதிதாக உள்ளது. இருப்பினும், உடன் நடித்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால், முடிந்தவரை நன்றாக நடித்து விட்டேன் என்று கூறும் வைசாலி, தொடர்ந்து நல்ல கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.