அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற்றதை அடுத்து சின்னத்திரையில் இருந்து பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஹீரோக்களாகி வருகின்றனர். அதேபோல், சில தொகுப்பாளினிகளும் சினிமாவில் என்ட்ரியாகி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது வைசாலி என்ற தொகுப்பாளினியும் இணைந்துள்ளார். இவர் சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர். அதோடு 50க்கும் மேற்பட்ட சினிமா ஆடியோ விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள வைசாலி, தற்போது ராஜாமந்திரி படத்தில் நடிகையாகியிருக்கிறார்.
இந்த படத்தில் கலையரசன்-ஷாலின் முதல் ஜோடியாக நடிக்க, இன்னொரு ஜோடியாக காளி வெங்கட்- வைசாலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தனது எதிர்வீட்டில் வசிக்கும் வைசாலிக்கு காளி வெங்கட் காதல் தூது விடுவது. பின்னர் அவரை எதிர்த்த வீட்டு காளி பிளவரே என்று பாடி கலாய்ப்பது என அவர்கள் ட்ரேக் ஜாலியாக இடம்பெற்றிருக்கிறதாம்.
இதுபற்றி வைசாலி கூறுகையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்ததில்லை. ஆனால் நான் தொகுத்து வழங்குவதைப்பார்த்து சிலர் நடிக்க அழைத்து வந்தனர். அப்படித்தான் ராஜாமந்திரி படத்தில் நடித்தேன். இந்த படத்தில் கிராமத்து கதை என்பதால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த வாழ்க்கை முறை புதிதாக உள்ளது. இருப்பினும், உடன் நடித்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால், முடிந்தவரை நன்றாக நடித்து விட்டேன் என்று கூறும் வைசாலி, தொடர்ந்து நல்ல கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.