‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் கலாபவன் மணியின் உடல்கூறு ஆய்வு அறிக்கையை ஐதராபாத் தடயவியல் துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில், கலாபவன் மணி குடிந்த மதுபானத்தில் மீத்தைல் ஆல்கஹால் என்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்திருந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரசாயன பொருள் மெதுவாக கொல்லும் தன்மை கொண்டது எனவும், குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்த ரசாயனம் கொடுக்கப்பட்டதாலேயே கலாபவன் மணி உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் வெளியிடப்பட்ட இரண்டு உடற்கூறு ஆய்வு அறிக்கைகளில் ஒன்றில் கலாபவன் மணி பூச்சி மருந்து கொடுத்து கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொன்றில் மீத்தைல் ஆல்கஹால் கொடுத்தே கலாபவன் மணி கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காகவே கேரள போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஐதராபாத் தடயவியல் ஆய்வாளர்கள் மீண்டும் ஆய்வு செய்தனர். இதில் விஷதன்மை கொண்ட ரசாயன பொருள் கொடுத்து கலாபவன் கொல்லப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.