ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா அண்மையில் அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பினார். பாலகிருஷ்ணாவின் 100வது படமான இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். முன்னாள் பாலிவுட் கனவு கன்னி ஹேமமாலினி இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் இப்படத்தின் நாயகியை இன்னும் படக்குழு தேர்வு செய்யவில்லை.
அனுஷ்கா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனராம். தற்போது நடிகை ஸ்ரேயா இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறபடுகின்றது. படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் நாகார்ஜுனா, கார்த்தி நடித்த ஊபிரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இப்படத்தில் ஸ்ரேயா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் திரை உலகில் அவரது இரண்டாவது சுற்றிற்கு இப்படம் நல்ல திருப்புமுனையாக அமையும்.