டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'. வினாடி வினா டைப்பிலான இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் ஒரு கோடி வரை பரிசாக பெறலாம். பங்கேற்பவர்கள் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது பரிசாக பெறுவார்கள். இதன் முதல் சீசனை சூர்யா தொகுத்து வழங்கினார், இரண்டாவது சீசனை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். 3வது சீசனை அரவிந்த்சாமி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி வருகிற 30ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை 3 நாட்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் புரமோவில் அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: போட்டியென்றால் பயமா, கப்பலை ஏன் கரையில் கட்டி வைக்கிறோம் கண்காட்சிக்கா இல்லை. கடலை தாண்டுவதற்கு, இதுவா அதுவா என்ற குழப்பம் வாழ்க்கையில் எப்போதுமே வரக்கூடாது. வாங்க விளையாடலாம். போட்டி உங்களுக்கும் எனக்கும் இல்லை. நான் உங்க பக்கம்தான் என்கிறார் அரவிந்த்சாமி.