பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'. வினாடி வினா டைப்பிலான இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் ஒரு கோடி வரை பரிசாக பெறலாம். பங்கேற்பவர்கள் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது பரிசாக பெறுவார்கள். இதன் முதல் சீசனை சூர்யா தொகுத்து வழங்கினார், இரண்டாவது சீசனை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். 3வது சீசனை அரவிந்த்சாமி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி வருகிற 30ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை 3 நாட்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் புரமோவில் அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: போட்டியென்றால் பயமா, கப்பலை ஏன் கரையில் கட்டி வைக்கிறோம் கண்காட்சிக்கா இல்லை. கடலை தாண்டுவதற்கு, இதுவா அதுவா என்ற குழப்பம் வாழ்க்கையில் எப்போதுமே வரக்கூடாது. வாங்க விளையாடலாம். போட்டி உங்களுக்கும் எனக்கும் இல்லை. நான் உங்க பக்கம்தான் என்கிறார் அரவிந்த்சாமி.