'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வளைகுடா நாடான பஹ்ரைனில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பஹ்ரைன் வளர்ச்சிக்கான தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டி பலரும் பேசினர். இந்திய தூதரக அதிகாரிகளும் மற்றவர்களும் கவுரவிக்பட்டனர். சமூக நல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 2016- 18ம் ஆண்டிற்கான புதிய குழு பொறுப்பேற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரவானா, சுதர்சன் செல்வராஜ், நடன ஆசிரியர் ரோகித், நடிகை வந்தனா, கன்னல் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. பல்வேறு நடிகர்களைப்போல் வேடம் அணிந்து, பின்னணி பாடகர் சரவணன் பாடிய பாடல்கள், நிகழ்வின் முத்தாய்ப்பாக விளங்கின. ரபிக் தலைமையிலான இசைக்குழுவினர் தங்கள் திறமையைக் காட்டினர். டிவி நடிகை ஸ்ருத்திகா, பாடகி சுஜாதா, பாரதி சங்க பாடகர் ஜாபர் சாதிக் ஆகியோருடைய பாடல்களும், பால் நிகழ்த்திய குழல் இசையும் சிறப்பாக இருந்தது.