‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக சின்னத்திரைக்கு வந்தவர் சவுந்தர்யா. அதன் பிறகும் பல நிகழ்ச்சிகளில் பாடகியாக பங்கேற்றவர் இப்போது சீரியல் நடிகையாகிவிட்டார்.
விஜய் டி.வியில் 400 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பான 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிப்பாகிறது. இதில் முந்தைய தலைமுறையில் காதல் திருமணங்களால் பிரிந்த குடும்பத்தை புதிய தலைமுறை காதல் சேர்த்து வைக்கிறமாதிரியான கதை. இதில் சவுந்தர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
“சீரியலில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. னுனது நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் நடிக்கிறேன். பெற்றோர்கள் முதலில் சம்மதிக்கவில்லை. இப்போது சமாதானமாகி ஓகே சொல்லிவிட்டார்கள். இனி பாட்டு, நடிப்பு என்ற இரண்டு பாதையில் எனது பயணம் இருக்கும்” என்கிறார் சவுந்தர்யா.