ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாஜி ஹீரோயின்களான ராதிகா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, தேவயானி, சுலக்சனா, சுதாசந்திரன் உள்ளிட்ட பல நடிகைகள் சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் மறுபிரவேசம் செய்தனர். அதேபோல் ராதா, பூர்ணிமா பாக்யராஜ், நமீதா, சங்கீதா, பிரியாமணி உள்ளிட்ட சில நடிகைகள் சேனல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இப்படி படவாய்ப்பு கள் குறைகிறபோது நடிகைகள் சின்னத்திரைக்கு வந்து தங்களை பிசியாக்கிக் கொள்கின்றனர்.
மேலும், ஏற்கனவே கோடீஸ்வரன் உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களில் சரத்குமார், சூர்யா போன்ற நடிகர்கள் பங்கேற்று வந்த நிலையில், விரைவில் அரவிந்த்சாமியும் ஒரு நிகழ்ச்சியை நடத்தப்போகிறார். இந்த நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ஸ்ரீனிவாஸ், சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வி-வாய்ஸ் என்ற இளம் பாடகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆண்ட்ரியாவும் நடுவராக பங்கேற்கிறார். நடிகை மட்டுமின்றி அவர் ஒரு பின்னணி பாடகி என்பதால் இந்த நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்து சிறந்த பாடகர் பாடகிகளை செலக்ட் பண்ணுகிறாராம். அவருடன் பாடகர்கள் பிரசன்னா, நரேஷ் அய்யர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.