இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாட்சா, அண்ணாமலை படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா, கடைசியாக பரத் நடிப்பில் ஆறுமுகம் படத்தை இயக்கினார். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்த சுரேஷ் கிருஷ்ணா மகாபாரதம் தொடரை இயக்கினார். அதன் பிறகு சில மினி தொடர்களை இயக்கினார்.
தற்போது டி.வி.சேனல்களுக்கென்றே தனி திரைப்படங்களை இயக்குகிறார். ஹிட்லர் எங்கிருந்தோ வந்தான் என்பது படத்தின் தலைப்பு, ஜீ தமிழ் சேனலுக்காக இயக்கிய இந்தப் படத்தில் தேவயானி, டெல்லி கணேஷ், அர்ஜூன், விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடிய திரைப்படத்தை 9 நாளில் எடுத்து முடித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது: திறமையான பல திரைக் கலைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், புதிய இளைஞர்கள் திறமையோடும், புதிய சிந்தனையோடும் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இத்தகைய திரைப்படங்கள் உதவும். சரியாக திட்டமிட்டால் 30 லட்சம் ரூபாய் ஒரு திரைப்படத்தை எடுத்து விட முடியும். என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.