விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
சின்னத்திரை தொகுப்பாளராக பிரபலமாகி சினிமாவுக்கு வந்திருப்பவர் ராஜ்கமல். தற்போது சண்டிக்குதிரை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அன்புமதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோடியாக கேரளத்து வரவு மானசா நடித்துள்ளார். கஞ்சா கருப்பு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். புதுக்கோட்டை மண்வாசனை கதையில் தயாராகியிருக்கும இந்த படம் தேர்தலுக்குப்பிறகு திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து ராஜ்கமல் கூறுகையில், இந்த சண்டிக்குதிரை படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். காதல், பாசம், ஆக்சன், காமெடி என நடிப்பின் நவரசங்களையும் வெளிப்படுத்தும் வகையில் எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. கிராமத்தில் சண்டித்தனம் செய்து கொண்டு திரியும் கதாபாத்திரம் என்றாலும், முழுக்க முழுக்க அப்படியல்ல. ரொமான்ஸ், செண்டிமென்ட், காமெடி காட்சிகளும் மனதை தொடும் வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், முதல் படத்திலேயே எனக்கு எல்லாவிதமான நடிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு நல்ல கதைக்களம் கிடைத்திருக்கிறது.
மேலும், இந்த படத்தில் , இறந்தவரை கையில் ஏந்திக்கொண்டு அழும் காட்சியில், நான் கிளிசரினே போடாமல் அழுதேன். அந்த காட்சியும், வசனங்களும் என்னை தானாகவே அழ வைத்து விட்டன. அதனால் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் கண்கலங்க வைக்கும். அந்த வகையில், சேது, பருத்திவீரன் படங்கள் வரிசையில் இந்த சண்டிக்குதிரை படமும் ரசிகர்களின் மனதில் இடம்பெறும் என்கிறார் ராஜ்கமல்.