அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கிசுகிசுக்களை பரப்புபவர்களுக்கு பயந்தால் சினிமாவில் தொழில் செய்ய முடியுமா..? அதனால் தான் மலையாள நடிகர் திலீப்பும் காவ்யா மாதவனும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டார்கள். அதன் படப்பிடிப்பும் இன்று இனிதே துவங்கிவிட்டது. படத்தின் பெயர் 'பின்னேயும்'. படத்தை இயக்குவது மலையாள சினிமாவின் முக்கிய இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். அதுமட்டுமல்ல, இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் பட்டியலில் அடூர் கோபாலகிருஷ்ணன் முக்கியமான இடத்தை பிடிப்பவர். மலையாள சினிமாவுக்கு பல அற்புதமான படைப்புகளை தந்திருப்பவர்.
திலீப்பிற்கும் அவரது மனைவி மஞ்சு வாரியருக்கும் விவகாரத்து அளவுக்கு நிலைமை போனதற்கே காவ்யா மாதவன் தான் காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் புதிய படத்தில் இவர்கள் இருவரும் வான்ட்டேட் ஆக இணைந்திருப்பார்களோ என்கிற ஐயம் சாதாரணமாகவே எழத்தான் செய்யும். ஆனால் கதைக்காக மட்டுமே நடிகர்களை அழைப்பவர் அடூர் கோபால கிருஷ்ணன் என்பதால் திலீப் - காவ்யா மாதவன் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதன் பின்னணியில் கிசுகிசுக்க கூடிய அளவுக்கு விஷயம் இருக்காது என்பதும் திரையுலகினருக்கும் நன்றாக தெரியும்.
திலீப்பும் காவ்யா மாதவனும் கடைசியாக இணைந்து நடித்த படம் 'வெள்ளரிப்பிறாவிண்டே சங்கதி'. இப்போது ஐந்து வருடங்களுக்குப்பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் திலீப் நடிப்பது இதுவே முதன்முறை. ஆனால் காவ்யா மாதவன் ஏற்கனவே 'நாலு பெண்ணுகள்' என்கிற படத்தில் அவருடைய டைரக்சனில் நடித்தவர்தான். அதைவிட 2008ஆம் ஆண்டில் 'ஒரு பெண்ணும் ரெண்டாணும்' படத்தை இயக்கிய அடூர் கோபாலகிருஷ்ணன் சுமார் எட்டு வருடம் கழித்து டைரக்சனில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருப்பது இன்னொரு ஆச்சர்யம்.