ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை சேனல்களின் சில பிரபலமான தொகுப்பாளினிகளில் ரம்யா குறிப்பிடத்தக்கவர். அவரது அழகான தமிழ் நடைக்கும், உச்சரிப்புக்கும் ஏராளமான நேயர்கள் உள்ளனர். மேலும், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்து இன்னும் பிரபலமான ரம்யாவும், நடிகை சமந்தாவும் உயிர்த்தோழிகளாம்.
இதுபற்றி ரம்யா கூறுகையில், நானும், சமந்தாவும் பள்ளிகாலத்தில் இருந்தே தோழிகள். சென்னையிலுள்ள பல்லாவரத்தில் தான் நாங்கள் படித்தோம். அப்போது எங்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு இப்போது வரை தொடர்ந்து வருகிறது. என்னதான் சமந்தா பிரபலமான நடிகையானபோதும் என்னிடம் அன்று பழகியது போன்றுதான் பழகுகிறார். அந்த அளவுக்கு பழசை மறக்காதவராக இருக்கிறார் சமந்தா.
மேலும், நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டால், சினிமா, டிவியைப்பற்றி பேசுவதைவிட எங்களது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள், எங்களது பழைய தோழிகளைப்பற்றித்தான் பேசிக்கொள்வோம். அந்த பசுமையான நினைவுகள் எங்களை பெரிய அளவில் பரவசப்படுத்துகிறது என்கிறார் ரம்யா.