தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா பிரபலங்களில் சிலர் தங்களுக்குள் மனமொத்து வாழ முடியாமல் விவாகரத்து பெறுவது வாடிக்கையான நிகழ்வுதான். அதன்பின் அவர்களில் சிலர் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து இன்னொரு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் உண்டு. ஆனால் மலையாள நட்சத்திர தம்பதிகளாக இருந்து இப்போது விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழும் நடிகர் திலீப்பும் மஞ்சு வாரியரும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசப்படவே செய்கின்றனர். இவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும் மறு திருமணத்திற்கு முயற்சி செய்யவில்லை. அப்படி செய்வதிலும் அவர்களுக்கு விருப்பமில்லையாம்.
அதேபோல ஒருவர் மற்றவரை தாக்கி எங்கும் பேசுவதும் இல்லை.. பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதை கூட முன்கூட்டியே அறிந்து தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மறைந்த நடிகர் ரத்தீஷின் மகள் பத்மாவின் திருமணத்தில் இருவருமே கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.. காரணம் மணப்பெண் பத்மா இவர்கள் இருவரையும் தனது சகோதர, சகோதரி ஸ்தானத்தில் வைத்து அன்பு செலுத்துபவர். அதனால் திருமண நிகழ்வின்போது இருவரும் அருகருகே நெருங்கி வந்து மணமக்களை வாழ்த்திய தருணத்திலும் கூட ஒருவரை ஒருவர் பார்க்காததுபோல நாசூக்காக விலகிவிட்டார்கள்.. திருமணத்திற்கு வந்திருந்த பலரும் இவர்கள் இருவரும் ஏதாவது பேசுவார்கள் என எதிர்பார்த்து ஏமாற்றமே அடைந்தார்களாம்.