சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
கேளடி கண்மணி தொடரில் சைலண்ட் வில்லியாகவும், அபூர்வ ராகங்கள் தொடரில் பாசிட்டிவான கேரக்டரிலும் கலக்கி வருகிறவர் ஏகவள்ளி. திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர். இப்போது சினிமா வாய்ப்பை தவிர்க்கிறார். இதுபற்றி ஏகவள்ளி கூறியிருப்பதாவது:
எப்போதுமே சீரியல்தான் பெஸ்ட் ஒரு சீரியலில் கமிட் ஆகிவிட்டால் ஒரு வருடம் நடிக்கலாம். சினிமா அப்படியில்லை. பத்து நாளில் ஒரு படத்தில் நடித்துவிட்டு அடுத்த படத்திற்கு வாய்ப்பு தேடவேண்டும். அவுட்டோர் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். சீரியல் அப்படியில்லை. காலையில் கிளம்பி வந்தால் மாலை வீடு திரும்பி விடலாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடலாம். அதற்காக சினிமாவே வேண்டாம் என்று சொல்லவில்லை. எனது மன திருப்திக்காக சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருகிறேன். பெயர் சொல்லும்படியான நல்ல கேரக்டர் கிடைத்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனாலும் சீரியல் பாதிக்கும் என்பதால் பல சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன்.
கேளடி கண்மணி, அபூர்வ ராகங்கள் தொடர்மூலம் நல்ல நடிகை என்று யெர் எடுத்துள்ளேன். அபூர்வ ராகங்களில் எனது கேரக்டரில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் வர இருக்கிறது. தொடர்களின் காட்சிகளை மக்கள் தங்கள் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதால் ஒவ்வொரு குடும்பதிலும் நானும் ஒருத்தியாக இருக்கிறேன். அந்த வகையில் எனக்கு முழு திருப்பிதான். என்கிறார் ஏகவள்ளி.