'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுமார் 30 ஆண்டுகால நடிகை குயிலி, பூவிலங்கு படத்தில் அறிமுகமான இவர், பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே -என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானார். அதையடுத்து தொடர்ச்சியாக கேரக்டர் மற்றும் பாடல்களுக்கு நடனமாடி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் பிரபல அம்மா நடிகையாகி விட்டார். தற்போது சரவணன் மீனாட்சி, காதல் முதல் கல்யாணம் வரை போன்ற தொடர்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி குயிலி கூறுகையில், ''சின்னத்திரையில் இயல்பான அம்மாவாக நான் நடித்து வருகிறேன். எந்தவொரு காட்சியை கொடுத்தாலும் அதில் குடும்பத்தில் இருக்கும் அம்மாக்கள் எந்தமாதிரியான ரியாக்சனை வெளிப்படுத்துவார்கள் என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு நடிக்கிறேன். நான் அப்படி நடிப்பது குடும்பப் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. அதனால் என்னை நேரில் பார்க்கும்போது உங்களை நடிகையாக நினைக்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராகத்தான் நினைக்க முடிகிறது என்கிறார்கள். இது மனதுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.
மேலும், என்னதான் சின்னத்திரை மூலம் தினம்தினம் நேயர்களை சந்தித்தபோதும், நான் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்ததால் இப்போதும் என்னைத்தேடி சினிமா வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் அதில் எனக்கு பிடித்தமான வேடங்களாக இருந்தால் மட்டுமே ஏற்று நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் டூ சென்னை என்ற படத்தில் அவரது அம்மாவாக நடிக்கிறேன். சீரியல் அளவுக்கு வெயிட்டான அம்மா வேடம் இல்லை என்றாலும், சினிமாவைப்பொறுத்தவரை அது பெரிய அம்மா ரோல்தான் என்கிறார் குயிலி.