ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது கட்சித் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் தேர்தல் செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுத்து ஒளிபரப்பி வருகிறது. நேரடி ஒளிபரப்பு, விவாத அரங்கம், கருத்து கணிப்பு என பொழுதுபோக்கு சேனல்கள்கூட செய்தி சேனல்களாக மாறி தேர்தல் செய்திகளை, நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
இதனால் தற்போது ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் டல் அடிக்கத் தொடங்கிவிட்டன. பெண்கள் கையில் இருக்கும் டி.வி.ரிமோட் கண்ட்ரோல் இப்போது ஆண்கள் கைக்கு மாறிவிட்டதால் பெண்கள் சீரியல் பார்ப்பது குறைந்து விட்டது. ஆண்கள் தேர்தல் செய்திகள் நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்த சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. தற்போதுள்ள நிலவரப்படி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது. அதனால் அந்த நிகழ்ச்சிகளுக்கே விளம்பரங்கள் குவிந்து வருகிறது.
இதனால் சீரியல்கள் தங்கள் ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ளவும், பெண்களின் கவனத்தை சீரியல் நோக்கி திருப்பவும், கதையில் திடீர் திருப்பங்களை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்காக அத்தனை சீரியல் கதை இலாகாக்களும் ரூம் போட்டு யோசிக்கிறார்கள். டப்பிங் சீரியலில் எதுவும் செய்ய முடியாததால் போராடிக்கும் காட்சிகளை வெட்டிவிட்டு சீரியலை வேகமாக நகர்த்த ஆரமபித்திருக்கிறார்கள். மே மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கும், ஜுன் மாதம் முதல்தான் இனி சீரியல்கள் கவனிக்கப்படும்.