போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
சின்னத்திரையில் ஆபீஸ், அக்னி பறவை, தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. இப்போது அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மாறாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி மதுமிலா கூறுகையில், ஆபீஸ் சீரியலில்தான் நான் என்ட்ரி ஆனேன் என்றாலும், சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனபோதும் சினிமாவில் உடனடியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் எனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு வந்தேன். அந்த வகையில், ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொருவிதமான வேடங்களில் நடித்தது எனக்கு நல்லதொரு அனுபவமாக அமைந் தது. அதோடு, எந்தமாதிரியான வேடங்களிலும் நடிக்கக்கூடிய தைரியத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில், பூஜை படத்தில் தங்கை வேடத்தில் சினிமாவில் என்ட்ரியான நான், ரோமியோ ஜூலியட்டில் தோழியாக நடித்து, அதையடுத்து மாப்ள சிங்கம் படத்தில் கவனிக்கப்படும் வேடத்தில் நடித்தேன். அதையடுத்து இப்போது இன்னொரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறேன். அந்த படத்திற்கு இன்னும் டைட்டீல் ரெடியாகவில்லை. மேலும், சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடித்து நல்லதொரு நடிகையாக நிலைக்க வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் மதுமிலா.