டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரு டிவி சீரியல் ஆரம்பிப்பது முதல் முடிகிற வரை அதில் நான் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால்தான் லீடு ரோல்களில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை தொடர்ந்து நான் கடைபிடித்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை சந்திரா லட்சுமண். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
மலையாள சீரியல்களில் நடித்து வந்த நான் தேவயானி நடித்த கோலங்கள் தொடரில்தான் தமிழுக்கு வந்தேன். முதல் தொடரிலேயே நல்லதொரு வேடத்தில் நடித்ததால் அந்த தொடரே என்னை பிரபலப்படுத்தியது. அதையடுத்து வசந்தம், மகள், சொந்த பந்தம் தொடர்களில் நடித்த நான் இப்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறேன்.
இந்த பாசமலர் தொடரில் லீடு ரோலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் பாசத்துக்காக நிறைய விசயங்களை விட்டுக்கொடுத்து நடிப்பதால் எனது கேரக்டருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நான் சிலரைப்போன்று பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிப்பதில்லை. பாசிட்டீவ் வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
காரணம், எனது முகத்துக்கு செண்டிமென்ட் வேடங்கள்தான் செட்டாகும். அதனால்தான் நடிப்பில் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக நான் நெகடீவ் வேடங்களை ஏற்பதில்லை. அதேபோல், சிறிய வேடங்களிலும் நடிப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் மட்டுமே நடிக்கிறேன். அதனால்தான் தெலுங்கில் நடித்து வந்த மமதலா கோவேடா தொடருக்குப்பிறகு இப்போது தமிழில் பாசமலர் தொடரில் மட்டுமே நடிக்கிறேன். சில சீரியல்களில் சிறிய கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று அழைத்தபோது மறுத்து விட்டேன்.
இதற்கு காரணம் ஒரு சீரியல் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் அதில் நான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இடையில் வந்து இடையில் போவது மாதிரியான கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதேயில்லை என்று கூறும் சந்திரா லட்சுமண், ஏற்கனவே மனசெல்லாம், ஏப்ரல் மாதத்திலே, தில்லாலங்கடி ஆகிய படங்களிலும் நடித்திருப்பவர், நல்ல வெயிட்டான வேடங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பாராம்.