ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் திலீப் - காவ்யா மாதவன் ஜோடி.. ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு என்பது போல திலீப்புகும் அவரது மனைவி மஞ்சு வாரியருக்கும் விவகாரத்து பெரும் அளவுக்கு நிலைமை போனதற்கே காவ்யா மாதவன் தான் காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் புதிதாக ஒரு சர்ச்சைக்கு பூஜை போட்டுல்லார்களோ என தெரிகிறது..
மற்றபடி அடூர் கோபால கிருஷ்ணன் படம் என்றால் அவர் தனக்கு தேவையான நட்சத்திரங்களை மட்டுமே தேர்வு செய்வார் என்பதால் இவர்கள் இருவரும் இணைவதில் எந்த உள்நோக்கமும் இருக்க முடியாது என நம்பலாம். இதில் ஆத்தூர் கோபால கிருஷ்ணன் டைரக்சனில் திலீப் நடிப்பது இதுவே முதன் முறை. ஆனால் காவ்யா மாதவன் ஏற்கனவே 'நாலு பெண்ணுகள்' என்கிற படத்தில் அவருடைய டைரக்சனில் நடித்தவர்தான். திலீப்பும் -காவ்யா மாதவனும் கடைசியாக இணைந்து நடித்த படம் 'வெள்ளரிப்பிறாவிண்டே சங்கதி'.. இப்போது இவர்கள் இணையும் இந்த புதிய படத்திற்கு 'பின்னேயும்' என டைட்டில் வைக்கப்பட்டு, மேமாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.